Friday, April 19, 2019

கொடுப்பவன் பெற்றுக்கொள்வது



அன்புள்ள ஜெ

கர்ணனின் கதையை முதலாம்சூதர் சொல்லத்தொடங்கும் இடத்திலிருந்து கர்ணன் தன் மகன்களுடன் இருக்குமிடம் வரை ஒரு ஒற்றைக் குறுநாவலாக வாசிக்கலாம். மண்ணிலிருந்து கொடைபெறும்பொருட்டு சூரியனால் அனுப்பப்பட்டவன். ஆனால் எதையுமே பெறவில்லை என நாவல் தொடங்குகிறது. அவன் ஒவ்வொருவருக்காகக் கொடுத்ததைச் சொல்லிக்கொண்டே வருகிறது. அம்மாவுக்கு வளர்ப்பு அம்மாவுக்கு தம்பிகளுக்கு கொடுத்தான். ஆனால் மகன்களிடமிருந்து பெற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்பது ஓர் அழகான கிளைமாக்ஸ். அந்த இடமும் உணர்ச்சிகரமாக மெல்லிய தொனியுடன் சொல்லப்பட்டிருந்தது

ஜெயராமன்