Friday, April 19, 2019

கர்ணனின் கொடை



அன்புள்ள ஜெ

கர்ணனின் கொடையைச் சொல்லும் கதைகள் ஒரு ஃபோக் பாணி கதை ஒரு கிளாஸிக்கல் கதை சில ரியலிஸ்டிக் கதைகள் என கலைடாஸ்கோப் திரும்புவதுபோல மாறி மாறி வெவ்வேறு கோணங்களைக் காட்டின. கர்ணன் தன் குருதியைக் கொடுக்கும் இடம் கற்பனை என நினைக்கிறேன். இல்லை ஏதாவது மகாபாரத வடிவங்களில் இருக்கிறதா? ராதைக்கும் கர்ணனுக்குமான உறவு அவள் தன் கணவனுக்காகப் பேரம்பேசிய அன்றே நுட்பமாக முடிந்துவிட்டது. அது அவளுக்கும் தெரியும். அவளுடைய பிரச்சினையே அதுதான். அவள் இப்போது அழுவதும் புலம்புவதுமெல்லாம் அவள் அவனை அப்போதே மானசீகமாக இழந்துவிட்டாள் என்பதனால்தான்


ராஜேந்திரன்