Sunday, April 7, 2019

கருந்தேன்



அன்புள்ள ஜெ

கார்கடல் 71 - துரியோதனன் துச்சாதனனிடம் "மந்தன் தப்பிவிட்டான்" என்கிறான்.
இது அவனை மீறி வந்த சொல்லா அல்லது உங்களையே மீறி வந்த சொல்லா என்று தெரியவில்லை. என்ன இருந்தாலும் மந்தன் என்பது பாசமுள்ள வார்த்தைதான்.
இன்று காலை இருட்கனி பற்றிய அறிவிப்பை படித்த என் மாமனார் அதை 'கருந்தேன்' என்று எப்படியோ மாற்றி நினைவில் கொண்டிருந்தார். துரியோதனனுக்கு அந்த பெயர் பொருந்தும் என்று தோன்றியது.

மது