Thursday, April 18, 2019

சென்னித்தல செல்லப்பன் நாயர்



அன்புள்ள ஜெ

கர்ணசபதம் கதகளியின் அந்தப்பகுதி அற்புதம். வயதான அன்னையாக நடித்த குடமாளூர் ஆடையை இழுத்து நெஞ்சொல் வைத்துக்கொள்வது திரும்பத்திரும்ப பாலூட்டியதைச் சொல்வது என அக்காட்சியை அற்புதமாக நடிக்கிறார்

ஆனால் கர்ணனாக நடிப்பவர் மிகப்பெரிய மாஸ்டர் என தெரிகிறது. கண்களில் தெரியும் ஆற்றாமை சோகம் கோபம், சட்டென்று எகிறி துரியோதனனையா பிரியச்சொல்கிறாய் என்று காட்டும் நளினமான ஆடல் எல்லாமே மாஸ்டர் ட்ச

அதில் உச்சம் அமர்ந்திருக்கையில் அந்தக் கால் துடிப்பது

மகாதேவன்


அன்புள்ள மகாதேவன்

அவர் பெயர் சென்னித்தலை செல்லப்பன் பிள்ளை. குரு செங்கன்னூரின் மாணவர். நுண்நடிப்புக்கு மைய இடம் கொடுக்கும் கப்ளிங்காடு முறையின் கடைசி மாஸ்டர் என்பார்கள் அவர் இன்றும் ஒரு தொன்மம் எனக் கொண்டாடப்படும் பெருங்கலைஞர்

ஜெ.