Sunday, April 28, 2019

இருட்கனி அத்தியாயம் 13-14.



அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

இருட்கனி அத்தியாயம் 13-14.  சல்யருடன் பேசிவிட்டு துச்சாதனன் கர்ணனை சந்திக்கிறான்.  துரியோதனனைக் கைவிட்டு விட்டதாக துச்சாதனன் கருதும் கோணம், அதன் உணர்வு எவ்வகையிலும் கர்ணனுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை என்று காட்டுகிறது அவனது பேச்சு.  பேராற்றல் கொண்ட தெய்வம் ஒன்றினைப் போன்றவன் அவன்.  தெய்வம் தன்னிடம் கோரிய பலருக்கும் வரங்கள் அருள்கிறது ஆனால் அவர்களின் எளிய மனங்கள் முக்கியம் எனக் கருதும் எவையும் அதற்கு முக்கியமானதல்ல.  ஒரு மெல்லிய திடுக்கிடல், ஆற்றலின் முன் பிலாக்கணம் வேண்டாம் அது என்ன தருகிறதோ அதைப் பெற்றுக்கொள் அது எங்கு கொண்டு செல்கிறதோ அங்கு செல், அதனுடன் இணைந்து அவ்வாறே செல்வதொன்றெ உன் கடன்.

“என் வாழ்வை இன்று இக்களத்தில் அங்கர் கையில் அளிக்கவில்லை. வில்லுடன் அவர் அக்களத்தில் எழுந்த அன்றே அளித்துவிட்டேன். இதுவரை அவர் அளித்த அனைத்தும் அவரது கொடை. இனியும் அவர் அளிப்பது எதுவோ அதுவே என் வாழ்வு”

முற்றிலும் சரணுற்ற பக்தன் என இங்கு தோற்றமளிக்கிறான் துரியோதனன்.


அன்புடன்,
விக்ரம்,
கோவை.