Tuesday, April 17, 2018

நாலாவது பெண்




அன்புள்ள ஜெ

மூன்றுபெண்கள் விதுரரின் உள்ளத்தில் இருப்பதைப்பற்றி ஒருவாசகர் எழுதியிருந்தார். நான்காவது இன்னொரு பெண்ணும் உண்டு. அது சத்யவதி. அவர் அவளைப்பற்றி நினைப்பதாக வெண்முரசில் வரவில்லை. ஆனால் அவர் அவளுடன் ஆழமான உறவைக்கொண்டிருந்தார். அந்நினைவை எங்கோ ஒளித்துவிட்டார். மழைப்பாடலின் முடிவே அந்நினைவை அவர் கரைப்பதுதான். ஆனால் அதுவும் எழுந்துவரும் என்று தோன்றுகிறது

மகேஷ்