Sunday, April 22, 2018

அஷ்டாங்கம்




தந்தை சொன்ன எட்டுநெறிகளை கடைப்பிடித்து தியானம் செய்வதாக வியாசர் சொல்கிறார்.  

1 சொல்லில் உளம்நிறுத்திபிறவற்றை தொகுத்துக்கொள்ளுதல். இது மந்திர தாரணை என்று சொல்லப்படுகிறது 

2 அதேசமயம் அந்தச்சொல்லில் மூர்க்கமாக பிடித்திராமல் அது நிகழவிடவேண்டும் 

 அந்தச்சொல் எண்ணங்களாகப் பெருகாமல் போகப்போக எண்ணமில்லாமல் குறையவேண்டும் 

4 பின்னர் மந்திரச் சொல் அர்த்தமிழந்து வெறும் ஒலி மட்டுமே ஆகவேண்டும். 

5 ஒலி இல்லாமலாகி மௌனம் 

6.வெறுமை, 

7 தனிமை 

8 தன்னிலையை கடந்து இல்லாமலாதல். 

இந்த எட்டு வகை எல்லா மரபிலும் சொல்லிக்கொடுக்கப்படும். அஷ்டாங்கமார்க்கம் ஒவ்வொரு யோகமுறையிலும் ஒவ்வொரு வகை. யோகாசனமுறையில் வேறு அஷ்டாங்கயோகநிலைகள் உள்ளன. வியாசர் மூன்றாம் நிலையிலேயே தவறிவிடுகிறார்
சாரங்கன்