Monday, April 16, 2018

மூன்று பெண்கள்




ஜெ

மூன்றுபெண்களால் அலைக்கழிக்கப்படுபவராக விதுரர் இருக்கிறார். சிவை அவருடைய அன்னை. அவர் அவளை கவனிக்காமல் இருப்பதுபோல் இருந்திருக்கிறார். ஆனால் அவருடைய மனம் அவளால் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கிறது. திரும்பத்திரும்ப அந்த ஜன்னலுக்கு அவர் சென்றுகொண்டே இருக்கிறார். இன்னொருத்தி சுருதை. அவருடைய மனம் நிறைந்த மனைவி. இன்னொருத்தி குந்தி. அவளுடைய சக்திவடிவமான உபாசனா தெய்வம். இந்தமூன்றுபெண்களை வைத்தே அவர் உலகத்தைப்புரிந்துகொள்கிறார் என புரிந்துகொண்டேன்

ராஜசேகர்