Friday, April 13, 2018

இயற்கை



இனிய ஜெயம் 

உணர்வு ரீதியாக ஒரு பெரிய ஆசுவாசம் ஒன்றினை அளித்தது இன்றைய அத்யாயம் . ஏன்  எப்படி என்று அறிய மீண்டும் வாசித்துப் பார்த்தேன் .  நிலம் தான் அந்த ஆசுவாசத்தை அளித்திருக்கிறது . அக ஆழத்தில் கிடந்தது உழலும் மொழிப்பெருக்கில் இருந்து விடுபட்டு , வாசக அகம்   நிற்கவும் நோக்கவும் சென்று படியவும்  ஒரு விரிவான நில சித்தரிப்பு முதன் முறையாக இந்த இமைக்கணம் நாவலில் விரிகிறது .அது தான் காரணம் : )

கடலூர் சீனு