Tuesday, April 24, 2018

மந்திரம்




ஜெ

தியான மந்திரத்தை பொதுவாக அர்த்தமில்லாத சப்தமாகவே சொல்வார்கள். ஆனால் அதை நாம் அர்த்தமாக ஆக்க முயன்றுகொண்டே இருப்போம். அர்த்தத்தை இன்றைக்கெல்லாம் இணையத்திலேயே தேடிக்கொள்ளலாம். சம்ஸ்கிருத ஒலி எல்லாமே ஒரு வார்த்தைதான். ஏதாவது ரூட் இருக்கும். இல்லாவிட்டால்கூட நாமே எதையாவது கற்பனைசெய்துகொள்வோம். என் நண்பர் ஒருவரின் மந்திரம் fa அவர் அதை புறாவாக நினைத்துக்கொண்டார். அவர் எல்லாவற்றையும் விட்டபின்னர் அவருடைய மந்திரத்தையும் அவர் அதை புறாவாக ஆக்கியதையும் என்னிடம் சொன்னார். மந்திரத்தை வெளியெ சொல்லக்கூடாது. அன்றைக்கு நான் அடைந்த ஒரு பெரிய அதிர்ச்சி எனக்கு நினைவிலிருந்து மாரவில்லை. எவ்வளவு பெரிய கட்டுமானம் மனுஷ மனசு. அது ஆயிரமாயிரம் ஆண்டுகளாக உண்டாகி வந்திருக்கிறது. அதில்இருந்து நாம் உருவாக்கியதுதான் பண்பாடு. தியானம் அதுக்கு நேர் எதிராகச்செல்லும் ஒரு பயணம்

மகாதேவன்