Wednesday, April 25, 2018

ஆஜகவம், குருதிச்சாரல்



மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
சில விஷயங்கள்.

1) (சொல்வளர்காடு – 50) மாந்தாதா ஏந்திய வில்லும், (குருதிச்சாரல் – 48) பிருது ஏந்திய வில்லும் ஒரே பெயர் - ஆஜகவம்.

2) கழுகு வடிவ யாகசாலை எவ்வாறு உள்ளது என்று இந்த பக்கத்தை பார்த்து தெரிந்து கொண்டேன்
 http://www.thehindu.com/lf/2004/06/17/stories/2004061701860200.htm

3 ) குருதிச்சாரல் – 48, துரியோதனன் பேசும் பேச்சும், மூதாதை குரு பேசிய  பேச்சும் (குருதிச்சாரல் – 2) ஒரே கருத்தை உடையதாக உள்ளது.

4)  "முதற்கனலில்" - பீஷ்மரின் பிறப்பு - தண்ணீரில் பெற்றெடுப்பாள்.
இப்போது இதே போல் பல இடங்களில் பின்பற்றுகிறார்கள்.

5) வெண்முரசில் இதுவரை அடுமனையாளர்கள், குதிரை சூதர்கள், பாணர்கள், குகர்கள், கட்டிடம் கட்டுபவர்கள், பந்தல் அமைப்பவர்கள், வியாபாரிகள், ஷத்ரியர்கள், விவசாயிகள் - இவர்களது தொழில் விவரணைகள் வந்திருக்கிறது.
இதுவரை வராதது:- இரும்பு கொல்லர்கள், படைக்கலம் செய்வோர், தங்க கொல்லர்கள், மரவுரி தயாரிப்போர் (இவர்களெல்லாம் தங்கள் தொழில் மூலம் மெய்மை அடைய வேண்டாமா?)


நன்றி.

இப்படிக்கு,
சா. ராஜாராம்,
கோவை.