Thursday, April 19, 2018

சாத்தன்


ஜெ

ஒவ்வொன்றும் மீண்டும் சரியாக வந்தமைவதன் ஆனந்தம் வெண்முரசின் இன்றைய பகுதியில் மீண்டும் கிடைத்தது

முதற்கனலில் வருபவர் சாத்தன். தென் திசையிலிருந்து வடக்கே செல்பவர். ஏனென்றால் அது வடக்கு என்பதனால். அவர் வியாசரிடம் சொல்கிறார் கிரைஞ்சத்தை வேடன் கொல்வதைக் கண்டு கண்ணீர்விட்ட ஆதிகவியின் கண்ணீர் அவரிடம் இருக்கிறது என்று

அதன்பின்னர்தான் அவர் வியாசவனத்தைக் கண்டடைகிறார். அங்கே கிரைஞ்சங்கள் கொன்றுகுவிக்கப்படுகின்றன. கொல்லாதே என்றுகூவுவதற்குக்கூட இவருக்கு வாய் இல்லை

 நான் பெருங்காவியத்தை எழுதவிருக்கிறேன் என்கிறார். அந்தப்பெருமையைத்தான் குத்தி உடைக்கிறார் சாத்தன்

ஜெயராமன்