Sunday, February 14, 2016

உடல்கள்





ஜெ சார்

ஜராசந்தனுக்கும் துரியனுக்குமான மற்போர் ஓர் உச்சம். இதுவரை பல மற்போர்கள் வந்துள்ளன. அனைத்திலும் ஒரு டெக்னிக்கல் நுட்பம் இருக்கும். நீங்களும் கலைச்சொற்க்ளை எல்லாம் போட்டு எழுதியிருப்பீர்கள். இது ஒரு காட்டான்சண்டை. இரு விலங்குகள்போல

ஆனால் இரு மல்லர்களும் உடனே ஒருவரை ஒருவர் புரிந்துகொள்கிறார்கள். உடலால். உள்ளமோ மொழியோ அவர்களுக்கு தொடர்புச்சாதனங்களகா இல்லை. உடல்தான் அதற்குரியவழியாக இருக்கிறது. அன்னம் என்று நீங்கள் முன்னரே சொன்னீர்கள். கௌரவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு உடல். ஒரு அன்னம் என்று

செல்வகுமார்