Tuesday, February 16, 2016

இளைய கௌரவர்கள்

 
 
திரு. ஜெ,

துரியோதனன், துச்சாதனன், இளைய கௌரவர்கள் மற்றும் கர்ணன் இவர்களின் பிணைப்பையும், பாண்டவர்கள் மேல் வைத்துள்ள பற்றையும் கண்டு திகைக்கும் நாங்கள், எப்படி இக்குழுமம் ஒரு பெண்ணின் மானம் பறிக்க எண்ணும் மடமையைக் கைக்கொள்ளப் போகிறது என்பதை எண்ணி குழப்பமும் அடைகிறோம்.

அதே நேரத்தில், அவ்வாறு ஆடை அவிழ்த்து, அவமதிக்கும் நிகழ்வு நியாயமே என்று எம்முள்ளமும் ஏற்றுக் கொண்டு விடுமோ என்னும் பயமும் உடன் வருவதை விலக்க இயலவில்லை.  எதுவாயினும், நிகழ்ந்த கதை நிகழாமல் போய், சோதரர் அனைவரும் சேர்ந்து வாழ்வதை மனதளவில் எண்ணி மகிழ்வுறுகிறோம்.

- கணபதி கண்ணன்