Monday, April 13, 2015

கர்ணனின் பொறாமை



ஜெ,

துரியோதனன் பானுமதியிடம் காதல்கொள்ளும்போது துச்சாதனனும் கர்ணனும் கொள்ளும் பொறாமை அழகாக வந்திருக்கிறது. அது அவர்களுக்கிடையே உள்ள ஆழமான நெருக்கத்தையே காட்டுகிறது. இதை இன்றைக்குக் கூட நாம் பல நட்புகளிலே காணமுடியும். காதல் என்றதுமே பல நண்பர்கள் கசப்பு கொள்கிறார்கள். காரணம் இதுதான்

ஆனால் அவர்களே அந்தப்பெண்ணைப்புரிந்துகொண்டால் மாறிவிடுவார்கள் என்றும் நினைக்கிறேன். இது என்னுடைய உண்மையான அனுபவம்

வாழ்த்துக்கள் ஜெ., விதவிதமான இளவாசிகள் வழியாக வெண்முகில்நகரத்தை அழகாக ஆக்கிவிட்டீர்கள்



கண்ணன்