Monday, April 13, 2015

யானையின் சுற்றம்



ஜெ,

வெண்முரசின் உச்சப்பகுதிகள் இதுதான் என்று நினைக்கையிலேயே வேறுவகையில் அது மாறிவிடுவதைக் காணமுடிகிறது. நீலம் போன்ற சைக்கடெலிக் படைப்பு இப்போது பெரும்பாலும் மறைந்துவிட்டது. கறாரான வாழ்வியல் உண்மைகளினால் ஆன வெண்முகில் நகரமே பெரிதும் கவர்கிறது

துரியோதனனின் பர்சனாலிட்டி இந்த பகுதிகளிலேதான் அற்புதமாக தெளிந்து வந்துகொண்டிருக்கிறது. அவனுடைய கருணையும் பெருந்தன்மையும் நிமிர்வும் எல்லாம் அற்புதமாக வந்துள்ளன. அவன் பூரிசிரவஸுக்கு வாக்களிக்கும் இடம் நுட்பமானது

அவனை யானை என்று சொல்லும் அந்த இருபாலினப்பெண் யானை கூட்டமகா குடும்பத்துடந்தான் வாழும் என்கிறாள். அது ஒரு அற்புதமான உவமை

சிவராஜ்