Thursday, July 9, 2020

குருபூர்ணிமை


அன்புள்ள ஜெ 

மிக மிக நெகிழ்வான நாள். காலையும் மாலையும் யூ டூயூப் வழியாகக் குருவின் முன்பு சீடனோடு சீடனாகக் கரைந்திருந்தேன் 

பத்து வருடங்களாக உங்களுடன் தொடர்பில் இருக்கிறேன். உங்களை, உங்கள் எழுத்துக்களை எண்ணாத நாள் என்று ஏதுமில்லை; மானசீகமாக உங்களைத் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறேன். உங்கள் நினைவு overwhelming என்று தோன்றி சில நாட்கள் உஙகள் தளத்துக்கே வராதிருப்பேன். ஆனால் சில நாட்களிலேயே வெறுமை சூழ்ந்து பாய்ந்து உங்கள் தளமணைவேன். 

என் மகள் பெயர் பிரயாகை. அவள் பிறந்த போது உங்களுக்குக் கடிதம் எழுதி உங்கள் ஆசி பெற்றிருந்தேன். மீண்டும் இந்நன்னாளில் உங்களை வணங்கி ஆசி கோருகிறேன். குருவருள் துணை நிற்க வேண்டுகிறேன். 

 

வள்ளியப்பன்

துபாய்.