Friday, September 11, 2015

அவதாரங்கள்

அன்புள்ள ஜெ.

இந்திர நீலம் முடிந்ததும் ஒரு பெரிய வெற்றிடம் உருவானது போல் தோன்றுகிறது.

சுபத்திரையின் பாத்திரத்தை இத்தனை சிறப்பாகச் சித்தரித்து வேறெதிலும்
நான் படிக்கவில்லை.இப்பாத்திரத்தை மையமாக‌ வைத்து ஒரு தனி திரைப்படமே.எடுக்கலாம் என என் மனதில் உடனே தோன்றியது.

திருஷ்டத்யும்னன்,சாத்யகி இடையிலான நட்பையும் இதுவரை இத்தனை தீர்க்கமாகநான் படித்ததில்லை. இது உங்கள் உருவகமா அல்லது முன்னமே வேறு நூல்களில்சொல்லப்பட்டுள்ள்தா.

இப்படைப்புகளை இணையத்தின் மூலம் படிக்கக் கொடுத்தமைக்கு மிக நன்றி.

மகாபாரதமே இன்னும் உங்க‌ளிடமிருந்து வரவிருக்கிறது. இருப்பினும் கேட்கிறேன்.

விஷ்ணுவின் மற்ற அவதாரங்களைப் பற்றியும் எழுதுவீர்களா.

அன்புடன்

ரமேஷ் கிருஷ்ணன்