Sunday, September 27, 2015

தத்துவத்தின் கனவு

அன்புள்ள ஜெயமோகன்

நாக உலகின் சித்திரம் பிரமிக்கவைத்தது. இரண்டுமுறை வாசிக்காமல் உள்வாங்கவே முடியாத அடர்த்தி. ஒரு கனவு போல. தியானம் போல என்றும் சொல்லலாம்

குண்டலினிப்பாம்பில் இருந்து சகஸ்ரமாக விரியும் பாம்புவரை ஏழு படிநிலைகள். இறுதியில் எஞ்சும் ஒளிவடிவம். அதன் நடுவே கருஞ்சுழி

ஒவ்வொரு வர்ணனையையும் நுணுக்கமாக வாசித்தாகவேண்டியிருக்கிறது. வென்றேன் என்று ஒருபடியில் சொல்பவன் வெற்றி என்றில்லை என்று எந்தப்படியில் சொல்கிறான். சென்றுகொண்டே இருப்பவன் என எந்தப்படியில் உணர்கிறான்

தத்துவத்தை கனவாக ஆக்கிய அத்தியாயம்

சுவாமி