Tuesday, September 13, 2016

தனிப்பறவை







ஜெ


கலைந்து பூசலிட்டு கூவி ஆர்த்து அமர்ந்து ஐயம்கொண்டு எழுந்து அமைந்து மெல்ல அனைத்துப்பறவைகளும் கூடணைந்தபின் கருக்கிருட்டினுள் இருந்து இறுதியாக குரலெழுப்பும் தனிப்பறவை எதை வேண்டுகிறது?


என்றவரியில் யுதிஷ்டிரரின் நிலையழிந்த தன்மை இன்னும் விலகவில்லை என்பதைக் காணமுடிகிறது. சமன்வயத்தை சாந்தீபனியில் கற்றுக்கொண்டபின் நடைமுறையை இங்கே மைத்ராயனியத்தில் கற்கிறார். 

ஆனாலும் மிஞ்சியிருக்கிறது. கிளம்பிச்செல்லப்போகிறா ர் என்று நன்றாகவேதெரிகிறது. அந்த ஒற்ரைச்சொல் ஒரு பெரிய அழைப்பு இல்லையா?



ராஜசேகர்