Tuesday, September 27, 2016

சொல்வளர்தல்



அன்புள்ள ஜெ

தருமனின் கதை வழியாக வாசித்தபோது சொல்வளர் காடு மௌனம் வளரும் காடு என்றுதான் எனக்குத்தோன்றியது. கூரிய விவாதம் வழியாக சென்று மேலும் மேலும் உக்கிரம் அடைந்து கடைசியில் அடுமனையில் வார்த்தையை இழந்து அப்படியே மௌனத்துக்குச் செல்கிறது

சொல்வளரவில்லை. ஒரு சொல்லாக மாறிச் சுருங்கிவிடுகிறது. அந்தச்சொல்லையும் கடைசியில் தீயில் வீசி அழிக்கிறார் தருமர்

சொல்வளர்வது என்றால் ஒற்றைச் சொல்லாக ஆவது இல்லையா? அதுதான் மந்திரம். ஆப்த்வாக்கியங்கள் எல்லாமே மந்திரமாக ஆகக்கூடியவை. மந்திரம் சொல் கிடையாது ஒலிதான். அந்த ஒலி வழியாக ஒலியே இல்லாத நிலையை அடைகிறார்

சொல்வளர்காட்டின் பொருள் என்பது தர்க்கம் ஆப்தவாக்கியமாக ஆவது .ஆப்த வாக்கியம் மந்திரமாவது. மந்திரம் மௌனமாவது. அதாவது காடு பூவாக ஆகி மணமாக ஆகி விடுவதப்போல



சாரதா