Wednesday, September 14, 2016

ஆத்மா - சாங்கியமும் சமணமும்





பருப்பொருளின் நிறைவின்மையை பரம்பொருளுக்கான தவிப்பென எண்ணிமயங்கியவர்களால் உருவாக்கப்பட்டது ஆத்மா  - என்று சாங்கியதர்சனம் கெட்கும் கேள்விக்கு அல்லது மறுப்புக்கு மிகச்சரியான விடையை சமணர் சொல்கிறார். வட்டமொன்று சுழலுமென்றால் மையமொன்று அமைந்தே தீரும்

அதாவது ஆத்மா உருவாக்கப்பட்டது அல்ல. உணரப்படுவது. ஏனென்றால் அது இல்லாமல் இதெல்லாம் நிகழாது. அதை அறிவதைப்பற்றியே சாங்கியர்கள்பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதை எப்படி உணரமுடியும் என அவர்கள் யோசிப்பதே இல்லை. ஒரே அத்தியாயத்தைக் கடந்துசெல்ல இத்தனை கஷ்டமாக இருந்ததே இல்லை. ஆனால் ஒரு நூலை வாசித்து முடித்த நிறைவு கடைசியாக வந்தது



மனோகரன்