Monday, September 5, 2016

விஸ்வரூபம்






ஜெ

இன்று கிருஷ்ணனின் இன்னொரு விஸ்வரூபம். இன்றைய விச்வரூபம் முன்பு கம்சனைக்கொன்றபோதிருந்ததைவிட எப்படியெல்லாம் மேம்பட்டது என்று பார்த்தேன். அன்று ஒரு விளையாட்டக இனிப்பு சப்பியபடி கொலைசெய்த அதே போர்வீரன். இன்று ஆங்காரமும் துக்கமும் கொண்டவனாக ஆகிவிட்டான். அன்று பற்றின்றி செய்தான். இன்று இது நிகழவேண்டும், இது தேவை என்று அறிந்து மனவிலக்கம் கொண்டு செய்கிறான். இரண்டும் இரண்டுவகையான விளையாட்டு. அந்த ஆட்டம் கடைசியாகத் தோற்கும் என்றும் தெரிந்திருக்கிறான். அதைச் சொல்லிவிட்டே செய்கிறான்.

கிருஷ்ணனின் போர்க்களக்காட்சியை கற்பனையில் கண்டு பதற்றம் அடைந்தேன். அவன் அந்த கழையில் நின்றுகொண்டிருப்பதை பலமுறை நினைத்துக்கொண்டே இருந்தேன்.

சிவக்குமார்