Monday, September 5, 2016

துரோகங்கள்




ஜெ

இன்றைய அத்தியாயத்தில் யாதவர்களின் துரோகங்களை வரிசையாக வாசித்தேன். கண்ணனுக்கு இதெல்லாம் புதிதல்ல என்று தோன்றியது. கூடவே இதெல்லாம் மகாபாரதத்தில் இருக்கிறதா என்றும் நினைத்து எடுத்துப்பார்த்தேன். 80 சதவீதம் நிகழ்ந்ததாகவெ இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். பலவாறாக மழுப்பிச் சொல்லப்பட்டிருந்தாலும் வெண்முரசில் நிகழ்ந்ததுபோல நிகழ்ந்திருக்கவே வாய்ப்பதிகம். கடைசியில் யாதவக்குலம் எப்படி முடிந்தது என்பதே அதற்குச் சான்றாகும்

மகாதேவன்