Monday, September 5, 2016

கண்ணனின் வாள்



அன்பின் ஜெ.

இதோ இன்றைய அத்தியாயாத்தை முழுதாக உள்வாங்கி படித்தேனா எனத் தெரியாது.  மனதின் கொந்தளிப்பில் இருந்து சில துளிகள்.

கடந்த  சில நாட்களாக கொந்தளித்துகொண்டிருக்கும் மனத்துடன் துடித்துக் கொண்டிருக்கிறேன். 

வாழ்வின் இந்த மத்திம வயதில், எடுத்த முடிவுகளைனைத்தும் தோல்வியிலேயே முடிவடைவதை வேடிக்கை பார்த்துகொண்டிருக்கிறேன். ஆம், தோல்வியை தவிர வேறெதையும் சுவைக்கவில்லை, கடந்த பத்தாண்டுகளாக.

இளைய யாதவன் சொல்ல ஆரம்பித்ததை, அவன் சொல்லில் இருந்து நான் ஆற்றிக் கொண்டிருக்கிறேன். அவனைப் போலவே, வெற்றி என்பது கைக்கெட்டும் தூரத்தில்தான் என்று மனதிற்கு தைரியம் சொல்லி சொல்லி உருவேற்றிக் கொண்டிருக்கிறேன்.

கடந்த சில/பல நாட்களின் குழப்பமான எண்ணங்களின் ஊடாக, இன்றைய கழையில் ஏறி அவன் ஊதிய பாஞ்சஜன்யம் அவன்  அவனுக்காக ஊதியதல்ல. அது எனக்காக ஊதப்பட்டது. ஆம், அது என் வருங்கால வெற்றிக்காக ஊதப்பட்டது. 

உங்கள் பாதம் பணிகிறேன் ஜெ, இன்றைய அத்தியாயத்திற்காக.

 

சிவா