Friday, September 9, 2016

சகோதரர்கள்





ஜெ, பலராமருக்கும் கிருஷ்ணனுக்குமான பூசலை வாசித்தபோது உடனடியாகச் சென்று நீலம் நாவலை வாசித்துப்பார்க்கவேண்டுமென்று தோன்றியது. மிகப்பெரிய ஒரு சோர்வு ஏற்பட்டது. இதெல்லாம் வாழ்க்கையில் நடந்துகொண்டிருப்பதுதான். யாராலும் எதுவும் செய்யமுடியாதுதான். ஆனாலும் அவதாரபுருஷர்களுக்குக்கூட இதிலிருந்து விதிவிலக்கு இல்லையே என்று நினைத்தபோது மிகுந்த துயரம் வந்தது. கிருஷ்ணர் பலராமரிடம் கெஞ்சும் இடங்கள் மிகவும் வருந்தவைப்பவை. ஆனால் பிளவு வந்தபின் ஒன்றுமே செய்யவும்முடியாது

சுபத்ரா