Sunday, July 8, 2018

தற்பலிகள்



அன்பின் ஜெ,

வணக்கம்!.

பிரகதியின் மகன் வடிவம் கொண்டு பாண்டவர் தரப்பு சென்றடைய முடிவெடுக்கும் திருதிராஷ்டர்.

கொற்றவை பூசையில் தற்பலி வஞ்சனம் உரைத்து களப்பலிக்கு குண்டாசி ஒப்புக்கொடுத்ததைப் போல் தன் தாய் அமர்ந்த சாளரத்திற்க்கு தன்னை
ஒப்புக்கொடுக்கும் விதுரர்.

யுயுத்ஸூ கையில் படையல் அன்னத்தை அளித்து அக்கரையில் தானும் நின்றிருப்பதை நினைவுபடுத்ததும் துரியோதனன்.

பாண்டவர் தரப்பில் ஒருவருக்கேனும்  இவ்வாறான ஆழ்மன எண்ணம் எஞ்சியிருக்குமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

நட்புடன்,
யோகேஸ்வரன் ராமநாதன்.