Friday, April 3, 2015

வெண்முரசில் சிக்கன்




வெண்முரசில் முக்கிய உணவாக வருவது கால்நடைகள்தாம். 'கோழி' போன்ற பறவை இனங்கள் முக்கிய உணவாக வந்ததாக நினைவில்லை.

முற்காலங்களில் கோழிதான் முக்கிய உணவாக இருந்ததாக Jared diamond கூறுகிறார். ஒருவேளை மேற்க்கில் மட்டும்தான் அப்படி இருந்ததா? 

- மஹேஷ் ஜெயராமன்
அன்புள்ள மகேஷ்
மகாபாரதத்தின் உணவுகளில் பறவைகள் குறிப்பிடப்படவில்லை. முட்டைகூட குறிப்பிடப்படவில்லை
ஆயுர்வேதப்படி பிற உயிர்களை உண்ணும் உயிர்களின் ஊன் உண்ணத்தக்கதல்ல. ஆகவே பறவைகளை வேடர்களே உண்டிருக்கிறார்கள்.
ஊனில்கூட நார் நாராகப்பிரியும் ஊன் உண்ணத்தக்கதல்ல. பாளம்பாளமாக பிரியும் ஊனே உண்ணத்தக்கது. பொதுவாக குளம்புகள் உள்ள உயிர்களே உண்ண ஏற்றவை
ஜெ