Saturday, April 4, 2015

பூரிசிரவஸின் மாற்றம்




ஜெ

இங்கு ஊரில் இணையம் இருக்கிறது ஆனால் எனக்கு தொலைபேச இணைப்பில்லை
இன்று பூரிசிரவஸ் ஒரு வாழ்க்கை வாழ்ந்து விடுகிறான் , ஒரு நெருக்கடியில் இருந்து இலகு ஆகும் பொழுது நாம் இரு மடங்கு திறனுடன் இயங்குவதைக் காணலாம். பூரி சிரவஸ் இத்தகைய வணிக யோசனைகளை சொல்லும் ஆள் அல்ல இதுவரை , இந்தப் பயணங்களும் அனுபவங்களுமே அவனை இப்படி ஆக்கி இருக்கிறது , அவன் சத்தியாகி போல  குறுகிய காலத்தில் பரிணமித்தவன்.

அவன் காணும் கனவு, மலையாகிய முகம் , எண்ணங்கள் புகைபோல என்கிற உருவகம் , பின்னர் அதில் இருந்து இந்த வணிக  ராஜீய யோசனை , மத்யகீடம் அது ஒன்றை ஒன்று தின்னும் இடம் என மிக அற்புதம்.

வீரர்களுக்கு படுகளம் போல இளவரசிகளுக்கு அடுக்களை .

காலையில் மிக மிக இனிய  அதே சமயம் காத்திரமான வாசிப்பனுபவம்  

கிருஷ்ணன்