Wednesday, April 1, 2015

மாறாதபாடல்




அன்புள்ள ஜெ எம் .

வண்ணக்கடல் அருமை தொடர்ந்து ரசித்து லயித்து படித்து வருகிறேன்..பகுதி இரண்டு : பெருந்துறைப் புகார் படத்தில் துரியனும் துச்சனும் இளைஞர்கள் உருவத்தில் இருக்கிறார்களே..கதையின் படி 10 வயதுக்குள் ..தவறாக கேட்டிருந்தால் மன்னிக்கவும்.

டாக்டர் பாலசுப்ரமணியம்

 
அன்புள்ள பாலசுப்ரமணியம்
தொடர்ந்து வாசித்தால் தெரியும், இளநாகன் செல்வது சமகாலத்தில் அல்ல. வளர்ந்த பாண்டவர்கள் மட்டும் அல்ல செல்லச்செல்ல பாரதப்போரே வந்துவிடுகிறது. ஆனால் அஸ்தினபுரி எங்கோ உண்மையில் சமகாலத்தில் நிகழவதாகவே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் சூதர்கள்

ஜெ