Sunday, November 6, 2016

அர்ஜுனனும் பெண்களும்







ஜெ

இன்றைய அத்தியாயத்தில் அர்ஜுனனைக் காணும் பெண்களின் அந்தப்பரவசத்தை கூர்ந்து பார்த்துக்கொண்டே இருந்தேன். நானே நன்றாக அறிந்த ஒன்றை மறுபடியும் பார்ப்பதுபோல இருந்தது. ஒருமுறை எங்கள் மும்பை அலுவலகத்துக்கு சச்சின் வந்திருந்தார். அவரைப்பார்த்த பெண்கள் அடைந்த பரவசத்தை நினைவுகூறுகிறேன். எனக்கு ஒன்று ஆச்சரியம் என்றால் அவர்கள் எவருக்கும் கிரிக்கெட்டில் பெரிய ஆர்வமில்லை என்பதுதான்.


இப்போது தெரிகிறது அவர்கலின் ஆர்வமென்பது அவரில்தான். லெஜெண்ட் ஆக இருக்கும் ஒருவரை உயிருடன் நேரில் சந்திப்பது அளிக்கும் பரவசம் அது. அவர்களின் கருப்பைகள் அதை ஆசைப்படுகின்ரன என்று தோன்றுகிறது. ஜாஸ்தியாகச் சொல்கிறேன். ஆனால் அது ஒரு காமவேகம் தான். ஒரு தனிப்பெண்னின் காமம் இல்லை. பெண்மையின் காமம்

ஒரு பெண் அன்றைக்கு சச்சின் போனபின்னர் அவர் சச்சினேதானா என்று கேட்டாள். ஆச்சரியமாக இருந்தது. அவரை மீண்டும் புராணத்துக்குள் அனுப்பிவிட அவள் நினைக்கிறாள் என்று இன்றைக்கு அர்ஜுனனும் பெண்களும் இருக்கும் நிலையைப்பார்த்ததும் உணர்ந்தேன்


எஸ். ஆர். சீனிவாசன்