Thursday, November 10, 2016

பீடையின் அதிகாரம்






ஜெ

அர்ஜுனனை அணுகிவரும் ஜேஷ்டாதேவி அவனை அவள் முதன்முதலாக பிடித்த இடத்தைச் சொல்லும்போது மெல்லிய சிலிர்ப்பு வந்தது. அந்த இடம் முக்கியமானது. ஆயுதப்பயிற்சி முடிந்து அவன் படைகொண்டு செல்லும் முதல் தருணம் அது. அன்றைக்குத்தான் அவன் அத்துமீறவும் செய்தான். அதன் பிரச்சினைகளைத்தான் அவன் அனுபவிக்கிறான்

ஈழத்தைப்பற்றிய ஒரு புத்தகத்தில் ஏகே47 கையிலே கிடைத்ததும் 15 வயசுப்பையன்கள் ஒரு பெரிய அதிகாரத்தை அடைவதையும் அவர்கள் மற்றவர்களை துச்சமாக எண்ணி மிரட்டுவதையும் எழுதியிருந்தார்கள் அதுதான் நினைவுக்கு வந்தது

அதுதான் படைக்கலத்தின் அதிகாரம். அதுதான் தைரியம் அளிக்கிரது. வெற்றியையும் அளிக்கிறது. ஆனால் அது பீடையின் அதிகாரமும் கூட இல்லையா?

சாரங்கன்