Monday, November 7, 2016

தாசியின் வடிவில்






ஜெ

முதன்முதலாக ஜேஷ்டாதேவி அர்ஜுனனை அணுகியது ஒரு குண்டான தாசியின் வடிவில் என்று பார்த்ததுமே நான் வண்ணக்கடலில் வரும் அத்தியாயம் என நினைத்தேன். அந்த அத்தியாயம் நினைவுக்கு வந்துவிட்டது. பிறகுதான் பிரயாகை என்று தெரிந்தது. பிரயாகையில் அந்த அத்தியாயத்தை மீண்டும் வாசித்தேன். நல்லவேளையாக கீழே இணைப்பு இருந்தது

அது அவனுடைய அம்மாவுக்கான தேடலும் கலந்த உறவாகவே அப்போது தெரிந்தது. அதுதான் அவனுடைய பீடிப்பு என்று இப்போது தெரிகிறது. அந்தவிபச்சாரியைப்பிடித்திருந்த பீடை அவளை எங்கே கொண்டுசென்று சேர்த்தது என்று வாசிக்கும்போது முதுகுத்தண்டு சிலிர்த்துவிட்டது

சந்திரசேகர்