Sunday, November 6, 2016

ஜேஷ்டாதேவி






ஜெ

அர்ஜுனனை அணுகும் அந்த முதல்பெண்ணில் ஜேஷ்டாதேவி எழுவதைப்பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன். அவளில்தான் சாமி எழமுடியும். ஏனென்றால் அவள்தான் முந்திச்சென்றாள். அவளுடைய அந்த மிதமிஞ்சிய காமம்தான் அவளை ஜேஷ்டை ஆக்குகிறது.

ஜேஷ்டையாக இங்கே காமம் சொல்லப்பட்டிருக்கிறது. அவள் காமம் வழியாகவே அர்ஜுனனை பிடித்துக்கொள்கிறாள். அந்தப்பெண் முன்னால் செல்வதும் அவள் உடலில் வரும் மாறுபாடுகளும் அவளுடைய மூச்சும் விம்மலும் எல்லாம் கண்முன்னாடியே நின்றிருக்கின்றன.

அர்ஜுனனை அவள் வாழ்த்தி அனுப்புவதைப்பற்றித்தான் நினைத்துக்கொண்டிருந்தேன். இனி அவள் என்ன ஆவாள்? அந்தக்கிராமத்தில் அர்ஜுனனின் மானசீக ராதையாக வாழ்வாள். இன்னொரு ஆணை அவளால் ஏற்றுக்கொள்ளமுடியாது. பிச்சியாக வாழவே முடியும்

மகாதேவன்