Tuesday, November 8, 2016

கண்டனம்


ஜெ

கிராதத்தை எப்படிப்புரிந்துகொள்வது என்றே தெரியவில்லை. எல்லாமே குரூரமாகவும் எதிர்மறையாகவும் இருக்கிறது. சகலகல்யாணகோலாகலன் ஆகிய கண்ணனை நீங்கள் காட்டும் விதம் மிகமிகக் கண்டனத்துக்குரியது. பாகவதத்திலோ மகாபாரதத்திலோ கண்ணன் அப்படிக் காட்டப்பட்டதே இல்லை. இப்படி நபியைக் காட்டும் துணிவு உங்களுக்கு வருமா? கண்ணனின் அவதார உத்தேசத்தையே அசிங்கப்படுத்துவதுபோல உள்ளது இந்தச்சித்தரிப்பு

ஆர்.எஸ்.ராஜன்