Monday, November 7, 2016

பெண்களும் குழந்தைகளும்






அன்புள்ள ஜெ

அந்த முதல் பெண் போய் அர்ஜுனனிடம் நிற்கும் காட்சியை பலர் எழுதிவிட்டார்கள். ஆனால் எனக்கு முக்கியமாகத் தோன்றியது அந்தப்பெண்களுக்கும் அவர்கள் குழந்தைகளுக்குமான உறவுதான். அந்த பெண்களின் சின்னக்குழந்தைகளுக்கு எப்படியோ அவர்களின் உனச்சிகள் புரிந்துவிடுகின்றன. அதை வாசித்தபிற்பாடுதான் அதேபோல ஆண்குழந்தைகள் நடந்துகொள்வதை நிறைய இடங்களில் பார்த்ததை நான் நினைத்துக்கொண்டேன். மனித மனதைப்புரிந்துகொள்வது மிகமிக ஆச்சரியமான விஷயம்தான். அதிலும் ஆண் பெண் உறவு என்பது கடவுளுக்குச் சமானம்

மனோகர்