Sunday, January 10, 2016

யின் யாங்






ஜெ

வெண்முரசில் கர்ணன் அழுத்தமான கதாபாத்திரமாக உருவாகி வருகிறான். கருணை கொண்டவன். பிறரை தன்னைப்போலவே அனுதாபத்துடன் பார்ப்பவன். தனக்குத்தேவையானவற்றை எடுத்துக்கொள்ளத் தெரியாதவன். தனிமையானவன். அன்புக்காக ஏங்குபவன். தன்னை அவமதிப்பவர்களை மன்னிப்பவன்.

அதேசமயம் நிலையற்றவன். உறுதியான முடிவுகளை எடுக்கமுடியாதவன். ஆகவே நல்ல அரசனாக இருக்கமுடியாதவன். ஆனால் நல்ல மனிதர்கள் சூழ்ந்திருப்பதனால் நல்ல அரசை அளிக்கிறான்

கருணையும் கோபமும் கொண்டவன். குளிரும் வெப்பமும் கலந்தவன். யின் யாங் மாதிரி.

அழகான குணச்சித்திரவார்ப்பு

சாமிநாதன்