Wednesday, January 20, 2016

வெய்யோனும் இந்திரனும்

 
 
அன்பு ஆசானிற்கு,
 
காண்டீபம் கர்ண பக்தனான எனக்கு ஆர்ஜுன யோகியின் நீண்ட தவம் மற்றும் நுணி மடியா தேடலின் வெற்றியை உணர்த்தியிருப்பினும் வெய்யோன் கசியும் கண்களுடன் மட்டுமே படிக்க முடிகின்றது... குழாமில் நண்பரொருவர் கூறியிருந்ததை தொரடர்ந்து, கர்ண ப்ரவேசம் மீண்டும் படித்தேன். 

மனம் மீண்டும் குந்தியை சுற்றியே.... என்றாவது ஒரு நாள் அவளும் சத்யவதி‍‍ ஐ போல் எல்லாம் துறந்து, துரியோதனனை அங்கீகரிக்க மாட்டார்களா என்று மனம் ஏங்குகிறது....

அன்புடன் 
ஜெகன்