Saturday, January 30, 2016

உளவியல் தோற்றங்கள்





ஜெ

பொதுவாக dilabolical ஆன தோற்றங்கள் தென்படுவதென்பது செவ்வியல்நூல்களின் ஒரு அழகு. ஷேக்ஸ்பியரில் நிறையவே காணலாம். மாக்பெத் காணும் பேய்கள் உதாரணம். செவ்வியலில் அவை தெளிவான சித்திரங்களாக வரும். பின்னர் உளவியல் தொடங்கியபோது அவை ஏன் உருவாகின்றன என்பதை ஆராய்ந்தார்கள்.  அவை குற்றவுணர்வு, மனக்குழப்பம், பயம் ஆகியவற்றின் வெளிப்பாடுகள் என அறிந்தார்கள்

அதன்பின் அவற்றை ‘சரியாக’ச் சொல்வதற்கான இலக்கியமுறை தொடங்கியது. பலர் உண்மையுருவமாக எழுத முயன்றனர். மனதை அப்படியே சொல்லும் முறை என்று அந்த stream of consciousness எழுத்தைச் சொல்லலாம். ஆனால் உளவியல் அதை பல கோணங்களில் நேரடியாகவே பதிவு செய்தபின்னர் அதை அப்படியே சொல்வதில் புதுமை இல்லை என்றாகியது. அவற்றை icon ஆக்குவதே கலை என்று தெரிந்தது. மீண்டும் கிளாஸிசம் திரும்பியது

இந்நாவலில் வரும் இந்தவகையான உளவியல் தோற்றங்களைப்பற்றி தனியாக எழுதவேண்டும். ஒரே ஆளுமை மூவராகத்தெரிவதென்பது ஒரு பெரிய புதுமைதான்

சிவசங்கர்