Wednesday, January 20, 2016

எளியஒழுக்கு



ஜெ

வெண்முரசின் நாவல்கள் ஒவ்வொன்றும் ஒருவகை. கர்ணனின் வலியையும் அவன் அடையும் அடைக்கலத்தையும் சொல்லும் வெய்யோன் மிகமென்மையான நாவலாக இருக்கிறது. கர்ணன் சிந்தனைசார்ந்த மனம் உடையவன் இல்லை என்பதனால் ஆழமான தத்துவசிந்தனை ஏதும் அவனுள்ளத்தில் எழவில்லை. அவன் உறவுகளையே கவனித்துக்கொண்டு செல்கிறான். ஆனால் சொல்லப்படாதுவிடப்பட்ட பலநுட்பமான விஷயங்களால் ஆனதாக உள்ளது இந்நாவல். ஒவ்வொன்றும் கொஞ்சமாகத் தொடப்பட்டு அப்படியே கடந்துபோகப்படுகிறது. நாவலின் எளிமையான ஒழுக்குதான் இதன் அழகு


சாமிநாதன்