Thursday, January 28, 2016

காண்டீபமெனும் கனவு



அன்பு வணக்கங்கள் ஜெ...

கடந்த முறை காண்டீபத்தின் நிறைவின் போதே உங்களுக்கு எழுத நினைத்திருந்தேன்.. சற்று நேரம், வாய்ப்பு பொருந்தி வரவில்லை. ஆதலாலே உங்களிடம் அப்போது அலைபேசியிருந்தேன். ( காண்டீபம்)அது சிறிது, சிறிதாக யோக வாழ்வில் அமிழ்ந்து தன்னை விரிக்கும் தனித்துவத்தின் உன்னதமாக இருந்தது. மேலும் அர்ஜூனனை நெருங்கி உணர்ந்து, அவனின் தீவிரமாகவே பல நேரங்களில் ஆகி, அவை கொண்டே அவனை நுகரும் வாயிலாகவே அதை என்னுள் உணர்ந்தேன். அவ்வனுபவத்தை படிக்கும் ஒவ்வொருவரும் அனுபவிக்கும் வாய்ப்பு கிட்டுவது உங்கள் எழுத்தின் தனித்தன்மை மற்றும் வன்மை ஆகும்.

இறையின் அருள் உங்களின் எழுத்தாடல்.. அதுவே உங்களின் மகிமையும், பேறும் கூட... இவ்வளவு அற்புதமான பொருளுடன் ஆன்மீக செறிவுடன் சிறந்த தமிழில் உங்கள் எழுத்தைசுவாசிக்கும் எங்கள் நுரையீரல் தூய்மை கொள்கிறது... நன்று சூழ்க! வந்தனங்கள் பல!

சுவாமி ஆர்