Wednesday, January 6, 2016

சிறைபெருந்தாழ் – 2



அன்னை விழித்திருக்கும் நேரமெல்லாம் அதன் காலடிகளில் பணி செய்யும் ஏவல்பூதமாக இருந்தாள். கைகளால் தரையை ஓங்கி அறைந்து அது வீறிட்டழுகையில் பால்சுரந்து முலைத்தடம் நனைய மூச்சிரைக்க அவள் ஓடிவந்தாள். வருகையில் ஆடை தடுக்க அவள் பிந்தினால் முலைக்கண்ணை கடித்து இறுக்கி அவளை அலறித்துடிக்க வைத்தது அது.

அவள் மைந்தர்களை பெற்றுக் கொண்டிருந்தாள். ஆனால் ஆணையிடும்போது தன் முன் உணவு கொண்டு வந்து படைக்கவும், கைபற்றிச் சென்று நீராட்டி மீட்டுக் கொண்டுவரவும், ஆடையணிவிக்கவும், கூந்தல் திருத்தவும், அடிபணிந்து குற்றேவல் செய்யவும், காமத்தை ஒலியில்லாது தாங்கிக்கொள்ளவும் மட்டுமே அவர் அவளை பயன்படுத்திக் கொண்டார். 

இனிய ஜெயம்,

இன்றைய அத்யாத்தில் இந்த இரு வாக்கியங்களை மட்டும் துண்டாக எடுத்து வைத்துப் பார்த்தால் அது தரும் துயர் தாள ஒண்ணாத வகையில் உள்ளது.  

அனைத்துக்கும் மேல் தன் மைந்தர்கள் காம வாழ்வு  கிடைக்காமல் போகக் கடவது என சபிப்பது,  காமாந்தகன் என ஒரு சொல் புழக்கத்தில் உண்டு அதன் ஆழம் என்ன என இன்றுதான் புரிந்தது.