Friday, January 22, 2016

உடலாதல்



ஜெ

உறவு ஒருபெரிய மாயம். கௌரவ நூற்றுவர் கர்னனுடன் கொண்ட உறவு ஒரு சப்ளைம் நிலையை அடைவதை காட்டுகிறீர்கள். ஆனால் குடித்து உளறி நக்கல்செய்து சிரித்துக்கூத்தாடிக்கொண்டும் இருக்கிறார்கள். ஆன்மீகமான ஒரு உச்சநிலை வெறும் உடலால் மட்டுமே அடையப்படுகிறது. அவர்களுக்கு மனம் என்பதே உடல்கள்தான். உடல் வழியாக ஒன்றாக் முடியும் என்பதுதான் அவர்களின் ஆன்மீகமான நிலை

இன்று[17 ஜனவரி] வெளிவந்த வெண்முரசில் கௌரவர்கள் உடல்வழியாக ஒன்றாக ஆகும் சித்தரிப்பு ஒரு பெரிய கிளாஸிக் டச்சுடன் இருந்தது. சாதாரணமாக இந்த இடத்தைச் சொல்லிவிடமுடியாது. அதற்கு மனித உடல்மேல் ஒரு மரியாதைவேண்டும். மனித உடல் எப்படி இன்னொரு உடலை அறிகிறது, அதைக் கொண்டாட்டமாக ஆக்கிக்கொள்கிறது என்ற தெளிவுவேண்டும்

சிவராமன்