Monday, January 18, 2016

அன்பின் விழியின்மை

ஜெ

கர்ணனின் கவசகுண்டலங்களைத் தாங்கள்பார்க்கவில்லை என்று  சுஜாதன் சொல்லும் இடம் நெகிழ்ச்சியானது. அவனே ‘நாங்கள் குருடர்கள்’ என்கிறான். அந்தக்குருட்டுத்தனம் அறியாமை அல்ல. அன்பேகூட அப்படிக் குருட்டுத்தனமாக ஆகக்கூடும். அதைத்தான் அந்தக் குறிப்பு உணர்த்துகிறது

கர்ணனை அந்த மக்கள் எதிர்கொள்வதிலுள்ள கொண்டாட்டத்தை அங்கநாட்டில் உள்ள மாறுபாடுகள் நிறைந்த கொண்டட்டத்துடன் ஒப்பிட்டுக்கொண்டேன்

ஜெயராமன்