Thursday, January 21, 2016

இன்சுவை


திரு. ஜெ,

பாதாளச் சுரங்கப் பாதையில் பயணிக்கின்ற பொழுது, எங்காவது இடையில் அமைக்கப்பட்ட, வெளிக்காற்று உட்புகுவதற்காக உள்ள காற்றுத் திறப்பில் நின்றால் எவ்வாறு குளுமையான காற்றை அனுபவிப்போமோ, உடல் சற்று இறுக்கம் தளர்ந்து அமைதி கொள்ளுமோ, அதுபோலவே தாங்கள் கர்ணனின் தந்தை அதிரதர், துரியனின் சகோதர கௌரவர்கள் சம்பந்தப் பட்ட பகுதிகளை அங்கதம் கலந்து, அள்ளி வழங்கும்போது, எங்கள் மனம் ஆசுவாசமடைவதைப் போலவே, தாங்களும் தங்களை பெரிய விசயங்களை எழுதும் இறுக்கத்திலிருந்து, இலகுவாக்கிக் கொள்கிறீர்கள் என்று கருதுகிறேன்.


பேருணவை அனுபவிக்கின்றபொழுது, இன்சுவை நீரும் அவ்வப்பொழுது அருந்துவது அத்தியாவசியம் அல்லவா ?

- கணபதி கண்ணன்