Tuesday, January 19, 2016

இருளின் வல்லமை



ஜெயமோகன் ,

தீர்க்கதமசும் விஷ்ணுபுரம்   வள்ளாலனும் துய்க்கும் காமம், அடிப்படை இச்சையாயினும் அதை அணுகும் முறையே எனக்கு ஒரு ஒவ்வாமையை அளிக்கிறது. தீர்க்கதமஸ் ஒரு எல்லை என்றால் தம்பியின் துணையால் குலம் பெருக்கிய (திருதாவின்)தீர்க்கசியாமன் மறு எல்லை போலும். விழிஇழந்தவர்கள் வகையில் மன்மதன் ராஜுவே எனக்குப் பிடித்தமானவன். மத வேழம் திருதாவும் அப்படித்தான் இருந்திருப்பார். நீலத்தின் சுழலில் இருந்து கரையேற உதவியதும் இதே காமம் தானே!!இதை எளிதில் கடப்பீர்கள் எனினும், நிலை துருவனாகவே எமக்கென்றும் இரும்.

அன்புடன் தேவர்பிரான்