Friday, January 29, 2016

ஜயத்ரதனின் சொர்க்கம்






ஜெ

பிருஹத்காயர் ஜயத்ரதனை தொடவே மாட்டேன் என்கிறார். காரணம் அவரது கையில் பாவக்கறை என அவர் நினைக்கிறார். குழந்தையை முதலில் காணும்போதுகூட அவர் கைகளை பின்னுக்கு மறைத்துக்கொள்கிறார்

மறுபக்கம் திருதராஷ்டிரர் கைகளை கொண்டு அத்தனை பிள்ளைகளையும் வருடி வருடி மகிழ்ச்சி அடைகிறார். அந்தக்காட்சியை அவன் பார்க்கிறான். அவர் அவனை அணைத்து வருடும்போது சொக்கிப்போய் அழுகிறான்.

ஜயத்ரதன் இழந்தது என்ன என்பதையும் அவன் ஏன் கௌரவர்களுக்கு அடிமையாகக்கிடந்தான் என்பதையும் காட்டும் அரிய காட்சி

மனோகர்