Sunday, January 24, 2016

விளையாடல்



இதை விதியின் விளையாடலாகத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும்.  கண்ணன் மட்டும் இப்போதே கர்ணனை சந்தித்திருந்தால் கௌரவர்களை வழி நடத்த வேண்டிய பொறுப்பினை உணர்த்தியிருப்பான். அதற்கான பாதையை காட்டியிருப்பான். இதை உணர்ச்சிவேகத்தினால் மட்டும் செயல்படும் துரியோதனனுக்கு சொல்லி புரிய வைக்க முடியாது. எப்போது அவனுடன் இருக்கும் கர்ணனின்மூலமாக கௌரவர்களை நல்வழிப்படுத்தியிருக்கமுடியும்\


. கௌரவர்களின் சிந்திக்கும் மூளையாக கர்ணனை மாற்றி அவர்களை அறவழி தவறாமல் நடந்திடாமல் செய்திருக்கலாம்.

   எல்லாம் முடிந்து போர் அறிவிப்பு முடிவான பிறகுதான் கிருஷ்ணன் கர்ணனை சந்திக்கிறான் என நினைக்கிறேன்.
 
தண்டபாணி துரைவேல்