Wednesday, January 6, 2016

பாற்கடலும் நச்சும்



அன்புள்ள ஜெ

தீர்க்கதமஸின் கதை ஒரு சித்திரத்தை அளிக்கிறது கரிய கடலைக்கடைந்து பாலாக்கி அதிலிருந்து அமுதத்தை எடுப்பதுபோல உள்ளது அது. எந்தத்திசையில் சென்றாலும் அது தீவிரமானது என்றால் முக்திமார்க்கமே என்று ஹடயோகிகளின் ஒரு வார்த்தை சொல்லப்படுவதுண்டு. இவர் காமம் வழியாகவே சென்று முழுமையை அடைந்திருக்கிறார்

அற்புதமான கதை . நீங்களே சொல்வதுபோல பிரிமிட்டிவ் ஃபாதர் என்னும் ஒரு பெரிய மெட்ஃபர் இக்கதையில் உள்ளது. பலகோணங்களில் வாசித்துத்தெளிவடையவேண்டியது. அவர் சொர்க்கம் செல்வதும் கண் திறந்து மண்ணைப்பார்ப்பதும் அருமையாக வெளிவந்த முடிவு

ஒரு தனிநாவலை வாசித்த அனுபவம் அது

செல்வராஜன்