Sunday, January 31, 2016

நிலைவில்



சார் ,

த்ரௌபதி சுயம்பரத்தில் பயன்படுத்தப்படும் வில் 'நிலை'வில் வகையை சேர்ந்தது தானே ( கீழ்பாகத்தை தரையில் ஊன்றி அம்பை எய்வது போன்று ) . தலைக்குமேல் இருக்கும் கிளிகளை அந்த வில் கொண்டு அடிக்க முடியுமா , எவ்வளவு சாய்த்தாலும் நேர் உச்சிக்கு அடிக்கமுடியும் அளவிற்கு சாய்க்க முடியாதே , காலையில் இருந்து குழம்புகிறேன் சார் :)
 
ராதாகிருஷ்ணன் 

அன்புள்ள ராதா

வில்லின் நடுவேதான் அம்பு பொருத்தும் முனை இருக்கவேண்டும் என்றோ வில் நடுவேதான் வளையும் மையம் இருக்கவேண்டும் என்றோ நெறி உண்டா? இல்லையே?
 
மேல்வளைவில் தலைக்கு மேலே பொருத்தி விட்டிருக்கலாமே

ஜெ